சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்!!!
இராமர் கோயில், பாபர் மசூதி வழக்கில் இருபிரிவினரில் ஒருவருக்கு நில ஊர்ஜிதம் செய்யாமல் கிறித்தவர்களையும் இணைத்து எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் இருந்திருக்கலாம்!!!
இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பிரச்சனையில் அப்பாவி மக்களை பாதுகாத்திருக்கலாம்!!!
சீனா எல்லை தாண்டி லே, லடாக், பகுதிகளில் நுழைந்த போது, அவர்களை வன்மையாக கண்டித்திருக்கலாம்!!!
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சுய விலை நிர்ணய உரிமை கொடுத்ததை தவிர்த்திருக்கலாம்!!!
கல்விக்கடனுக்கு பதிலாக அந்த தொகைக்கு அரசே முன்வந்து பல கல்வி நிறுவனங்களை நிறுவி பட்டதாரிகளை பணியமர்த்தியிருக்கலாம். போலி கல்வி நிறுவனங்கள் பல முளைத்திருக்காது!!!
தங்களது கட்சி அமைச்சர்களையும் கூட்டனி கட்சிகளையும் கட்டுக்குள் வைத்து ஊழலை தடுத்திருக்கலாம்!!!
இதை செய்யாத அரசுக்கு மக்கள் தந்த தீர்ப்பு படு தோல்வி…….இனி எதற்கு எதிர்க் கட்சி பதவி!!!!!!!
இது ஒருபுறம் இருந்தாலும், இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் கட்சி பதவி வழங்காதது பா.ஜ.க அரசின் தனிப்பெரும்பான்மை செருக்கை காட்டுகிறது!
![]()

