kabadi

ஜூலை17, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சடு குடு கபடிப்போட்டி சமீபகாலமாக மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்திய கபாடி அணி உலக அளவில் எப்போதும் முன்னிலை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து தமிழகத்தின் புகழை நிலைநாட்டி வருகிறது.

அந்த வகையில் விளாத்திகுளம் குளத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 52 ஆம் ஆண்டு அகில இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளுக்கான கபடி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி இம்மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் போபால், தெற்கு ரயில்வே, கர்நாடக மாநில ராணுவ அணி, நாக்பூர் கிளப், மும்பை கிளப், சென்னை ஐ.சி.எப்., சென்னை சாய், தமிழ்நாடு போலீஸ் உள்ளிட்ட 12 அணிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். பெண்கள் பிரிவில் அரியானா, மும்பை கிளப், மேற்கு ரயில்வே, சென்னை சாய், சென்னை கபடி, மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

Loading