Plane with 18 people on board missing in Nepal

நேபாளத்தில் 18 பேருடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று விமானத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேபாள் ஏர்லைன்ஸை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் சுற்றுலா பகுதி ஒன்றிலிருந்து ஞாயிறு மதியம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போய்விட்டது.

பொக்காரா விமான நிலையத்திலிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட விமானம் 15 நிமிடங்களில் காணாமல் போனதாக நேபாள காவல்துறை செய்தி தொடர்பாளர் கே.சி.கணேஷ் கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 18 பேரில் 14 ஆண்களும், ஒரு குழந்தை மற்றும் மூன்று பணியாளர்களும் பயணித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் இருப்பிடம் பற்றி அறிந்து மீட்பு பணியை மேற்கொள்ளுமாறு காவல்துறையினரை விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Loading