பிப்ரவரி 21: காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராட் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக கேப்டன் டோனி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கேப்டன் பொறுப்பை விராட் கோஹ்லி பார்ப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
![]()

