சிபிஎஸ்இ பிளஸ் டு பொருளாதாரம் பாடத்துக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு!

சிபிஎஸ்இ பிளஸ் டு பொருளாதாரம் பாடத்துக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு!

சிபிஎஸ்இ தேர்வுக்கான கேள்வித்தாள்கள் வெளியானதையடுத்து, இந்நிகழ்வு நாடு முழுவதும் அனைத்து மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் நடத்தப்படும் பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்புப் பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சம்பவத்தால், நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்படிருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அனில் ஸ்வரூப், “வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடத்திற்கான மறுதேர்வு நடைபெறும். 10 ஆம் வகுப்பு கேள்வித்தாள் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியானதால், அங்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படலாம். நாடு முழுவதும் நடத்துவதென்றால் ஜூலை மாதம் நடத்தப்படும். 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து இன்னும் 15 நாட்களில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு