நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மதுரையில் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின் போது அவரோடு ஏராளமான தொண்டர்களும் கொடிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். அப்போது தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை தனக்குத்தானே ஊற்றுக்கொண்டு தீ வைத்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த தொண்டர்கள் அவர் மீதான தீயை அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீக்குளித்தவர், சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பது தெரிய வந்துள்ளது. இதைக் கேள்விபட்ட வைகோ கண்ணீர் விட்டார். தொண்டரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தொண்டர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, கௌதமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Loading