ஐ.பி.எல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து நேற்று சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்தும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். இதையடுத்து பலத்து பாதுகாப்புடனும், தீவிர சோதனைக்கு பிறகும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் மைதானத்திற்குள் ரசிகர்கள் சிலர் தங்கள் காலணி மற்றும் மேலாடையை கழட்டி வீசினர். இதனால் 2 நிமிடம் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்தர ஜடேஜா “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மீது நாங்கள் இன்னும் அன்பும், அக்கறையும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.”

இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

#ChennaiSuperKings #CSK #IPL #IPL2018 #CSKvKKR #KKRvCSK #ProtestAganistIPL #CauveryWaterManagement

 

 

Loading