varungandhi

ஏப்ரல் 03, புதுடில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை பாராட்டி பேசிய வருண் மீது பா.ஜ., அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ., சார்பில் சுல்தான்பூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் வருண். இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது சகோதரரும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுலின் தொகுதி பணிகள் குறித்து பாராட்டி பேசியிருந்தார்.

வருணின் இந்த பேச்சு பா.ஜ.,வில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருணை தொடர்பு கொண்டுள்ள பா.ஜ., மிகவும் கவனத்துடன் பேசுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Loading