மார்ச் 03: லக்னோ, மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிவருபவர்களுக்கு லக்னோவில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். அரசு தோல்வி அடைந்ததை அடுத்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை பற்றி பேசுகின்றன என்று மோடி கூறியுள்ளார்.
“அவர்கள் வேலைவாய்பை பற்றி மறந்து விட்டார்கள். தண்ணீர் தேவை குறித்து பேச மறந்துவிட்டார்கள். விலைவாசி குறித்து மறந்துவிடார்கள். ஆனால் மதாசார்பின்மை குறித்து பேசுகிறார்கள்” என்று மோடி கூறியுள்ளார்.
![]()

