மார்ச் 07: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி புதுக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.க்களுடன் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் குமார் ரெட்டி இதனை தெரிவித்தார்.
வரும் 12 ஆம் தேதி ராஜமுந்திரியில் நடைபெறயுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்த அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
![]()

