Aadhar not mandatory for subsidized LPG cylinders

புதுடெல்லி, பிப்ரவரி 22: மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மானியத்தை ஆதார் அட்டை அடிப்படையில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, ஆதார் அட்டை இல்லாமல் மானியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் இனிமேல் சிலிண்டரை பெறலாம்.

இதற்கான விளக்கத்தை ஒரு வாரத்தில் அரசு வெளியிடும். ஒரே முகவரியில் 2 சமையல் அறைகள் இருந்தால் அல்லது 2 தனி வீடுகள் இருந்தால், 2 இணைப்புகளை பெறலாம். அதற்கான உத்தரவாதத்தை நுகர்வோர் தர வேண்டும். இவ்வாறு மொய்லி கூறினார்.

Loading