Modi attacks secular parties says its a way to cover up failures

மார்ச் 27, புதுடில்லி: டில்லி பேரணியில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மக்களை குழப்ப எதிர்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. டில்லி மக்கள் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டை பார்த்துள்ளனர். கெஜ்ரிவால் காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகின்றார். இதனால் அவர் பா.ஜ., வை விமர்சிக்கிறார். அவர் காங்கிரசின் நலனுக்காகவே செயல்படுகின்றார். மக்கள் நலனுக்காக செயல்படவில்லை. நாட்டை ஆளும் அளவுக்கு ஆம் ஆத்மி வளர்ச்சியடையவில்லை என கூறினார்.

Loading