பிப்ரவரி 27: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு பிரச்சார கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அஸ்ஸாமில் கடந்த 2 நாட்காள சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கடைசி நாளான நேற்று கவ்காத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர்.
அப்போது நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும் என்று ராகுல் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியிடம் கை குலுக்க பலர் முண்டியடித்தபடி நெருங்கினர். அவர்களில் ஒரு பெண் திடீரென ராகுலை நெருங்கி தலையில் முத்தம் கொடுததார்.முத்தமிட்டார். மேலும் ஒரு இன்னொரு இளம்பெண் ராகுலை நெருங்கி வந்து கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
![]()

