rahulgandhi

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். முன்னதாக ராஞ்சியில் உள்ள மகிளா காங்கிரஸ் பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது, தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும், அந்த சட்ட விரோத செயலை காங்கிரஸ் ஒரு போதும் செய்யாது என்றும் கூறியுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் கூறியுள்ளார். ராகுல்காந்தி மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு உள்ளார். ராஞ்சியில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு, குஜராத் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Loading