தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இருவரையும் இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.
தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க கூடாது என்றும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார்.
![]()

