Month: February 2014

பிரிந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் லாலு!

பாட்னா, பிப்ரவரி 25:பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.,க்கள் இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அக்கட்சியில் 8 எம்.எல்.ஏக்கள் விலகியிருப்பது லாலுவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

பிப்ரவரி 25: வங்கதேசத்தில் இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க்கின்றன. போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள சர்வதேச அரங்கத்தில் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து…

ராட்சத மாம்பழத்தை காணவில்லை! தீவிர வேட்டையில் போலீஸ்! (வீடியோ இணைப்பு)

பிப்ரவரி 25: ஆஸ்திரேலியாவில் 10 டன் எடை கொண்ட ராட்சத மாம்பழம் காணாமல் போனதால் பெறும் பதட்டம் நிலவுகிறது. கங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும்…

கவலைக்கிடமான நிலையில் அம்பரீஷ்! நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

பிப்ரவரி 25: கன்னட திரையுலகின் பிரபல நடிகரும், கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சருமான அம்பரீஷ் (62) திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் அம்பரீஷ் உடல்நலம் குறித்து அவரது…

சென்னையில் பயங்கரம்! தலைமை செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு!

பிப்ரவரி 24: சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று மதியம் 13.40 மணி அளவில் சுமார் 35 வயதுதுடைய ஒருவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். எரியும் தீயுடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த…

வட இந்திய ஊடகங்களில் உரக்க ஒலித்த தமிழனின் குரல்!

பிப்ரவரி 24: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர். அவர் திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட…

ரஜினி கமலை இயக்கபோகும் ஷங்கர்!

பிப்ரவரி 24: ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கமல் நடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் ஷங்கர் உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஷங்கரின் இந்தியன். 1996-ல் பெரும்…

சீமாந்திராவுக்கு சிரஞ்சீவி! தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ்! காங்கிரஸின் புதிய திட்டம்!

பிப்ரவரி 24: ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்படுவது நிச்சயமாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் அடுத்த கட்ட திட்டத்துக்கு தயாராகி வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் உள்ள காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பாகவே தெலங்கானா, சீமாந்திராவுக்கு தனது கட்சியைச் சேர்ந்தவர்களை முதல்வராக நியமிக்க ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்பாக,…

சோச்சி குளிர்கால ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவடைந்தது!

பிப்ரவரி 24: ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. 17 நாட்கள் நடைபெற்று வந்த இப்போட்டிகளில் முதன் முறையாக அதிகத் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தது ரஷ்யா. 13 தங்கம், 11…

காஸ் சிலிண்டர்கள் பெற ஆதார் அட்டை தேவையில்லை?

புதுடெல்லி, பிப்ரவரி 22: மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மானியத்தை ஆதார் அட்டை அடிப்படையில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் வழங்குவதில் சிக்கல்…

நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்!

சென்னை, பிப்ரவரி 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. எழும்பூர் பின்னி லிங் சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ்…

நடிகையிடம் பளார் வாங்கிய இயக்குநர்! யு டியூப்பில் அம்பலம்!

சினிமா, பிப்ரவரி 22:பாலிவுட் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. இக்காட்சி வீடியோவாக சமூக வலை தளத்திலும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் கீதிகாதியாகி பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி…